ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைக் கோளபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. கடந்த 12 நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி நிழற்குடையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து உதவினார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மூதாட்டியிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜாமணி என்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜாமணியின் கணவர் தண்டபாணி வீட்டை விட்டு சென்றார். இதனால் ராஜாமணியும் வீட்டை விட்டு வெளியேறி பேருந்து நிழற்குடையில் தங்கியிருப்பது தெரியவந்தது.