மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக தலைவர்கள் தேமுதிக நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டுவதால், கூட்டணியை உறுதி செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும், 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக சம்மதிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.