வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 17 நாளை கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.