முன்னதாக சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் பிராங்பட் நகருக்கு லுப்தான்ஷ வாரத்தில் ஐந்து நாட்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வந்தது. பிராங்க் பார்ட் நகரில் இருந்து அமெரிக்கா கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டதால் இந்த நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமானத்தை இணைப்பு சேவையாக பயன்படுத்தி வந்தார்கள். இதனால் இந்த விமானத்தில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும். இதனால் இந்த விமானத்தில் செல்ல டிக்கெட் கிடைப்பது பெரும் சவாலாக இருக்கும்.

இந்த நிலையில் கொரோனா காலத்தில் சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல மீண்டும் விமான சேவை படிப்படியாக தொடங்கப்பட்டது. ஆனாலும் இந்த விமான சேவை மட்டும் தொடங்கப்படவில்லை. எனவே இந்த சேவையை மீண்டும் கொண்டு வருவதற்கு பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வந்த நிலையில் பயணிகள் உடைய கோரிக்கைக்கு ஏற்ப மீண்டும் சென்னை – ஜெர்மனி இடையான விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த சென்னை – ஜெர்மனி இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.