ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்குப் பிறகு முக கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் கொரோனா காலத்தில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கினர். அந்த வகையில் ஹாங்காங் நாடுகளும் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியது. தற்போது கொரோனா அச்சம் நீங்கிய நிலையில் பல நாடுகள் முக கவசம் அணிவதை கட்டாயமாகவில்லை.

945 நாட்களுக்கு பின்னர் முக கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. ஹாங்காங் நாட்டின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பொது இடங்களில் இனிமேல் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிக நாட்களுக்கு முக கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.