இரண்டு கிலோமீட்டர் தொலைவு ரயில் தண்டவாளத்தை திருடர்கள் பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டம் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் சரக்குகள் ஏற்றி செல்வதற்காக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சர்க்கரையாலை மூடப்பட்டதால் அந்த தண்டவாள பகுதி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாக தெரிகின்றது.

இந்த நிலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவு கொண்ட ரயில் தண்டவாளம் காணாமல் போனதால் ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தண்டவாளத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.