இந்தியாவில் சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றினால் 3611 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இன்று 2961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33,232-ல் இருந்து 30,041 ஆக குறைந்துள்ளது.