இந்தியாவில் கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவானதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வருகின்ற 8-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மே 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.