கடந்த மாதம் ஏழாம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் 28 நாட்களாக இன்று வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை குறி வைத்து காசா மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. வான் வழியாகவும் கடல் மார்க்கமாகவும் தாக்குதல் மேற்கொண்டு வந்த இஸ்ரேல் சமீப நாட்களாக தரைவழியாக காசாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் ஹமாஸ் தரப்பிலிருந்து ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளதால் போர் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.