ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்துள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதிலும் புகை மண்டலமாக காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.