சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை 23 இடங்களில் திறக்க மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் சம்பா 2022 -2023 பருவ நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து நெல் கொள்முதல் வரத்து இருக்கின்ற காரணத்தினால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக சிவகங்கை தாலுகாவில் உள்ள வேம்பத்தூர், தமராக்கி, தெற்கு சோழபுரம், மானாமதுரை தாலுகாவில் உள்ள சின்ன கண்ணூர், மிளகனூர், விளத்தூர், கட்டிகுளம், முத்தனேந்தல் அதேபோல் காளையர் கோவில் தாலுகாவில் உள்ள சாத்தரசன் கோட்டை ,புல்லுகோட்டை, திருபுவனம் தாலுகாவில் உள்ள தஞ்சாக்கூர், திருப்பாச்சேத்தி, கீழ ராங்கியம், ஏனாதி, இளையான்குடி தாலுகாவில் உள்ள கீழநெட்டூர், முனைவென்றி தாயமங்கலம், கல்லல் தாலுகாவில் உள்ள எஸ்.ஆர் பட்டினம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள நெற்குப்பை, காவனூர், திருக்கோஷ்டியூர் போன்ற 23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.