மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் முடிவுக்கு வந்த இந்த வழக்கில் சங்கரநாராயணனுக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.