சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலையில் நள்ளிரவு ஏற்பட்ட வாயுகசிவால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்வை சுவாசித்த 30க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில்  இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிகிறது. கோரமண்டல் ஆலைக்கு  கடல் வழியாக வாயு எடுத்து வரும் குழாயில் இருந்து அமோனியா வெளியானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.