இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அகரம் காலனி. செங்குன்றத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  இன்று மின்சார விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கியதில் லைட் மேன் சண்முகம் உயிரிழந்தார். படுகாயத்துடன் மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.