கொலை செய்துவிடுவேன் என அதிமுக எம்எல்ஏ மிரட்டியதாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்ட அதிமுக கவுன்சிலர் கணேசன். இவர் அளித்துள்ள புகாரில், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ-வான மான்ராஜின் மனைவி வசந்தி, மாவட்ட சேர்மனாக இருந்து வருகிறார். இவர் எனது வார்டு பணிகளுக்கு கடந்த 2 வருடங்களாக நிதி ஒதுக்கவில்லை.

இதுகுறித்து நான் கேட்தற்கு, நேற்று எனக்கு போன் செய்து, ‘ஏற்கெனவே 2 பேரை கொன்று இருக்கிறேன். அதுபோல் உன்னையும் எரித்துக் கொலை செய்துவிடுவேன். கொலை செய்வது எனக்கு புதிதல்ல’ என மான்ராஜ் மிரட்டியதாக புகார் அளித்துள்ளார்.