பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த நாளில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அந்தப் பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். பொதுவாக இரட்டை குழந்தைகள் என்றால் சில நிமிட இடைவெளியில் பிறக்கும். ஆனால் இந்த பெண்ணுக்கு 22 நாட்கள் இடைவெளியில் பிறந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை துரதிஷ்டவசமாக உயிரிழந்தது.