செப்டம்பர் மாதத்திலேயே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலே ஜிஎஸ்டி வரி வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிலேயே செப்டம்பர் மாதத்தில் 10,481 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் வசூல் செய்யப்பட்ட 8,637 கோடியை விட 21% அதிகம். அகில இந்திய அளவிலே 10% ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 21% அதிகரித்து இருக்கிறது. அதாவது தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக தமிழ்நாட்டிலேயே ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்திலேயே செப்டம்பர் மாதத்தில் 197 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் செய்யப்பட்ட 188 கோடியை விட 5% அதிகமாகும். பெரிய மாநிலங்களிலே தெலுங்கானாவில் 33 சதவீதம் வளர்ச்சி, மகாராஷ்டிராவில் 17 சதவீதம் வளர்ச்சி, சத்தீஸ்கர் மாநிலத்திலேயே 18 சதவீதம் வளர்ச்சி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் 15 சதவீதம் வளர்ச்சி என ஜிஎஸ்டி வரி வசூல் செப்டம்பர் மாதத்தில் கணிசமாக உயர்ந்து இருக்கிறது.

இந்த நிதியாண்டிலேயே நான்காவது முறையாக அகில இந்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1.6 லட்சம் கோடி கடந்துள்ளது. அதேபோலவே இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 11% ஜிஎஸ்டி வரி வசூல் உயர்வின் காரணமாக 9 லட்சத்து 92 ஆயிரத்து 58 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும் நிலையிலே, தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 1.6 கோடி லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.