களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது , ”கரடு முரடான பாதைகளில் பயணித்து எத்தனையோ போராட்டங்கள் எத்தனையோ தியாகங்கள் செய்துள்ளோம். லட்சக்கணக்கான மக்கள் சிறைக்கு சென்று இருக்கின்றோம்.

நூற்றுக்கணக்கானவர்கள் தன் உயிரை நம் கட்சிக்காக, இயக்கத்திற்காக தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கொடுத்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். என்னுடைய நோக்கம் 2026இல் சட்டமன்ற தேர்தலில் பாமக உறுதியாக ஆட்சி அமைக்கும்’ என பேசினார்.