உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திருப்புன்கூர் என்ற ஊரில் உள்ள கோயிலில் நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சிவனை பார்க்க அனுமதி இல்லை என்று சொன்னதால், நந்தியை சற்று விலகச்சொல்லி சிவன் காட்சியளித்த தர்மம் நம்முடைய சனாதனம்” என்று புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.