புதுக்கோட்டை மாவட்டம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் , நடுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தலைமை ஆசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் எனவும், இடைநிலை பட்டதாரி மற்றும் உடுமலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் இடைநிலை ஆசிரியராக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனவும் முதுகலை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம்  சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள்  விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து சரியான ஆவணத்தோடு நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.