இங்கிலாந்தில் 2012 ஆம் ஆண்டு ராய் பிக் என்ற நபர் காணாமல் போய் உள்ளார். அவரை காவல்துறையினர் பல இடத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் 2021 ஆம் வருடம் ஒரு கட்டிடத்தில் இருந்த பிரீசர் பெட்டியில் இருந்து சடலமாக ராய் பிக் மீட்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவரது கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் ராய் பிக் கொலை தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.