ஹரியானா மாநிலம் ஜிந்த் என்ற மாவட்டத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 15 வயது மைனர் சிறுமியை மூன்று பேர் கடத்திச் சென்று 20 நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 20 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனதாகவும் இது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு குற்றவாளியை கைது செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் சிறுமியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் மூன்றாவது நபர் உத்தர பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.