திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் சாதிக் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முகமது அலியுடன் மொபட்டில் துவரங்குறிச்சி பிரிவு சாலையில் இருக்கும் ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சாதிக் அலியும், முகமது அலியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.