புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சின்ராசு (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் தேதி வேலைக்காக வெளிநாடு செல்லவிருந்தார். இவருக்கு கார்த்திக்(23) என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமயம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சின்ராசு, கார்த்திக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.