ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை கூட்டு ரோடு அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் நிறுத்தியுள்ளனர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்யாண், ராணிப்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது. லாரியில் சோதனை செய்ததில் 80 மூட்டைகளில் 4 டன் ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனால் செல்வராஜ் மற்றும் கல்யாண் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.