கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் குறிஞ்சிப்பாடி ரெயிலடி பகுதியை சேர்ந்த விஜய் என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஜயை கைது செய்து, அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கூடுவாஞ்சேரியை சேர்ந்த கமலேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.