சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெற்கு ராஜ வீதியில் வேதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை பேருந்து நிறுத்தத்தில் கடை நடத்தி வருகிறார். கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர். மறுநாள் காலை கடைக்கு சென்ற வேதமுத்து பணம் திருடு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சயாடைந்தார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணத்தை திருடிய கார்த்திக் ராஜா, அய்யாசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.