கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் கோவை, சென்னை மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விடுமுறை அளித்து, தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஓணத்தையொட்டி கடந்த ஆண்டு, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ஈரோடு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நடப்பாண்டு ஓணம் பண்டிகைக்கு தற்போதுவரை சென்னை, கோவை-க்கு மட்டும் (ஆக. 29) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 மாவட்டங்களுக்கும், மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை தொடர்பான அறிவிப்பு இன்றுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.