சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று மெரினா பீச். இங்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் அதிகமானவர்கள் வந்து தங்களுடைய பொழுதை கழித்து வருகிறார்கள். விதவிதமான உணவுகள், குதிரை சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் மெரினா கடற்கரையில் இருக்கிறது. இந்த நிலையில் வடசென்னை பகுதியில் ஏராளமான கடற்கரைகள் இருந்தாலும் அவை மெரினா, பெசன்ட் நகர் போன்று புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக இல்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு வட சென்னையில் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும் என்று பெரு நகர வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி காசிமேடு மார்க்கெட்டில் இருந்து எண்ணூர் விரைவு சாலை வரை உள்ள கடற்கரை பகுதியில் 7 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உணவகங்கள், நீரூற்று நடைபாதைகள், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பிரமாண்டம மீன் சிலை,, கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட உள்ளது. ஏறக்குறைய 7 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் மாசுபிரமணியன் தெரிவித்துள்ளார். மெரினாவை போன்று இதை மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் வடசென்னை குடும்பத்துடன் சென்று பொழுதைக் கழிக்க ஒரு சரியான ஒன்றாக விரைவில் மாறும் என்றும் கூறியிருக்கிறார்.