தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பன்னெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் அபிநயா கணக்கு பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.