தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்வுத்தாள் மறு கூட்டலுக்கு மாணவர்கள் மே 7 நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுத்தேர்வு தொடர்பான அறிவிப்புகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.