தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் நடந்த இந்த பணியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால் மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நாளை தொடங்க உள்ளது. திட்டமிட்டபடி மே ஆறாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.