கும்பகோணம் அருகே இரண்டு இளைஞர்களை கொலைசெய்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி வீட்டில் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆடு வெட்டும் 3 கத்திகள், ஒரு கட்டர், கையுறைகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன 20 பிளேடுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இளைஞர்கள் அசோக்ராஜன், முகமது அனாஸை கொலை செய்து உடல்களை தனது வீட்டில் புதைத்ததாக கேசவமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி தோண்டியபோது சிறிய அளவில் சுமார் 20 எலும்பு துண்டுகள் கிடைத்தன.