2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத EB இணைப்பை அகற்றுவதோடு, கணக்கை முடித்து வைக்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டாக பயன்பாட்டில் இல்லாத இணைப்பை புதுப்பிக்க கோரும்போது, அவரை புதிய விண்ணப்பதாரராக கருத வேண்டும், அவரிடம் இருந்து நிலுவைத் தொகை, புதிய இணைப்பு கட்டணம் வசூலித்த பிறகே மின் விநியோகம் வழங்க வேண்டும் எனவும் கணக்கு முடிக்கும் பணிகளை மே. 31க்குள் முடிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை, அலுவலர்களுக்கு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை வாரந்தோறும் தலைமையகத்துக்கு சமர்ப்பிக்க கூறி, வருவாய் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.