12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக் கூடாது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே 8ஆம் தேதி +2 ரிசல்ட்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மே.8 முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மே.8-19 வரை விண்ணப்ப பதிவு நடைபெறும். www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்யலாம். அதேசமயம், B.E, B.Tech படிப்பிற்கு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று தொடங்கியுள்ளது. https:// www.tneaonline.org என்ற தளத்தில்