உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கோரக்பூர்-சோனாலி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சோகமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. தனது கடையின் முன் சாலையோர தூசியின் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த அபிஷேக் யாதவ் என்ற இளைஞர் மீது, கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார் ஒன்று மோதியது.
இந்த மோதலின் தீவிரம் காரணமாக, அந்த இளைஞர் சுமார் 30 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முழுவதுமாக சிசிடிவி-யில் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
<a href=”http://
🚨 महराजगंज में दर्दनाक सड़क हादसा!
सड़क किनारे पानी डाल रहे युवक को तेज़ रफ्तार कार ने जोरदार टक्कर मार दी। युवक 30 फीट दूर जाकर गिरा—पूरी घटना CCTV में कैद।
सावधानी ही सुरक्षा है!#Maharajganj #RoadAccident #CCTV #ViralVideo #UttarPradesh #BreakingNews pic.twitter.com/TzkrrQMOZx
— Indian Observer (@ag_Journalist) December 6, 2025
“>
உயிரிழந்த அபிஷேக் யாதவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
