தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை ல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை நாசமாக போய்விடுகிறது. இதனால், இனி மது அருந்த வரும் 18 வயதுக்கு உட்பட்டோரை கண்டறிந்து அவர்களுக்கும், அதுபோல முதல் முறையாக குடிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.