இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக கடமையாகும். இவ்வாறு வாக்களிப்பதற்கு மக்களுக்கு தேவையான ஆவணமாக கருதப்படுவது வாக்காளர் அட்டை. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவருமே வாக்களிக்கும் விதமாக வாக்காளர் அட்டை பெறுவார்கள். எனவே 18 வயது பூர்த்தியானவர்களுடைய பெயரை வாக்காளர் பட்டியல் சேர்ப்பது அவசியம். வாக்காளர் அட்டை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in நுழைந்து செல்போனில் மற்றும் ஓடிபி பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.

அதன்பிறகு  Register as New Voter – Form 6 செய்து அதில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். முகவரி சான்றுக்காக அதற் அட்டை மற்றும் புகைப்படத்தை பதிவேற்றவும். தற்போது விண்ணப்ப ஐடி ஒன்று வழங்கப்படும்.  அதை பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்துக் கொள்ள முடியும்.