நபர் ஒருவர் உயரத்தைக் காரணம் காட்டி MBBS படிக்க அனுமதிக்காத இந்திய மருத்துவ கவுன்சிலை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி கடைசியில் அவர் படிப்பை முடித்து பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார். அவர் தான் குஜராத்தை சேர்ந்த டாக்டர் கணேஷ்.

3 அடி உயரம் உள்ளதால் அவசரக்கால சிகிச்சைகளைக் கையாள முடியாது என கூறி அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தை நாடியபோது 2019ல் MBBS படிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இவரின் இந்த தன்னம்பிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.