தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிவில் சப்ளை டி.ஜி.பி வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்‌ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் நியமனம்.  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர் ஆக தமிழ் சந்திரன் ஐபிஎஸ் நியமனம். திருவள்ளுவர் எஸ்பி சுரேஷ்குமார் தென்காசிக்கு மாற்றபட்டுள்ளார்.தென்காசி எஸ்பி சாம்சன் என்ஐபி சிஐடி எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.