275 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது அரசின் இலக்காகும். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, கல்வி நிலையங்கள் அருகே உள்ள சில மதுக்கடைகள் குறித்து புகார் எழுந்து வருகிறது. அதன்பேரில், அடுத்தகட்டமாக 275 மதுக்கடைகளை மூட அரசு உத்தேசித்துள்ளது.