லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, ‘ஆட் பீரோ’ நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றுள்ளார்.

முரளி கடனாக பெற்ற பணத்தை ‘ஆட் பீரோ’ அபிர்சந்த் நஹாருக்கு திரும்ப அளிக்காததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015ஆம் ஆண்டு அபிர்சந்த் பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கீழமை நீதிமன்றத்தில் தொடருமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.