கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பயாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புலியரசி பகுதி வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.