திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருக்கும் விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ்குமார் என்பவர் தங்கியிருந்தார். இந்த விடுதி அருகில் திடீரென ரதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரதீஷ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.