உத்திரபிரதேசம் மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் பிஹட்என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த சோபியன் என்ற இளைஞரிடம் பழகியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி இரவு 10 மணியளவில் அந்த இளைஞர் சிறுமியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அவரின் பேச்சை நம்பி சென்ற சிறுமியை கிராமத்திற்கு அருகே உள்ள மறைவான பகுதிக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பன் ஷாருக் உடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி தனது நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக இரண்டு நாள் கழித்து பெற்றோரிடம் கூறிய நிலையில் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகிறார்கள்.