பல நலத்திட்ட நிகழ்ச்சிகளை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கேரளா வந்தார். கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் பங்கேற்று பேசினார். இதையடுத்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம்-காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
அதன்பின் அவர் சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியம் சென்றார். இந்த நிலையில் நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உள்ளார். இதுகுறித்த போட்டோவை தன் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள உன்னி முகுந்தன், “14 வயதில் உங்களை தூரத்தில் இருந்து பார்த்தேன்.
தற்போது உங்களை சந்தித்ததிலிருந்து மீளவில்லை. உங்களுடன் பேசிய அந்த 45 நிமிடங்கள் என்னுடைய வாழ்வின் சிறந்த நிமிடங்கள் ஆகும். நீங்கள் சொன்ன வார்த்தையை என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு அறிவுரையும் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டு உள்ளார்.
This is the most electrifying post from this account!🔥Thank you sir, from seeing you afar as a 14 year old and now finally Meeting you, I’m yet to recover! Your, “Kem cho Bhaila” on stage literally shook me up! It was one big dream that I had to meet u & talk to you in Gujarati! pic.twitter.com/5HbSZWwtkB
— Unni Mukundan (@Iamunnimukundan) April 24, 2023