சென்னையில் 1343 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட சென்னை காவல் ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடத்தவும் விநாயகர் சிலைகளை அமைத்து அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிலைகளை அமைக்க விரும்புவோர் காவல் துறை மற்றும் வருவாய் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.