பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்க ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 1,750 முக்கிய இடங்களில் மொத்தம் 5,250 சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 1,336 இடங்களில் 4,008 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபி இடத்திற்கு சங்கர் ஜிவால் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.