தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி எஸ்பி ஸ்டாலின், கோவை வடக்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையரானார். உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி, மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், அரக்கோணம் ஏஎஸ்பி யாதவ் க்ரிஷ் திருப்பூர் தெற்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் சென்னை காவல்துறை பாதுகாப்பு துணை ஆணையராகவும், கோவை வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை ஆணையர் ரோஹித் நாதன் ராஜகோபால், கோவை போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.