உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குஷி நகரில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஷி நகரில் உள்ள தாராயசுஜன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் 12 வயது சிறுமியின் சடலம் சந்தேகத்திற்கிடமான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அரை நிர்வாணமாக காணப்பட்ட சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கழுத்தை நெறித்து கொன்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.